வெள்ளி, 3 ஏப்ரல், 2009

பாயிரம்

செல்வ விநாயகர் காப்பு
வருவினை முதலிரு வினை நீக்கி
வரந்தரவே சுப்பிரமணிய
புரத்தமர்ந்த செல்வ விநாயகனே!!
அறந்தருந் தேவியுமைத் தலைமகனே!!
எளிய மகன் தமிழி னிக்க
ஏற்றகுரு நீயென வந்தேன்
கற்ற பிழைபொறுத்து இந்நூலை
வெற்றி வழி கொண்டு நிற்க.!







செல்வ முருகன் காப்பு
செந்தமிழ் தந்த செல்வ முருகா!!
சந்தங்கள் தந்தெமை யாண்டு
பொங்கு தமிழுக் கென்பணி
சங்கமென முழங்க
இங்கெழுந் தருள் செய்க!






தேவி முத்தாரம்மை காப்பு
காலத்தே யெமை ஈர்த்தெந்தன்
காரியங்கள் நோக்கிக் கொண்டு
எக்கணமும் எமைப்பிரியா
முக்கண்ணன் துணையாளே!!
முத்தமிழும் நீ தருவாய்
முத்தார தேவி யுந்தன்
பித்து மகன் வேண்டுகின்றேன்
காத்தருள வேண்டு மம்மா!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக